×

ம.பியில் பரபரப்பு பஸ்சில் தீப்பற்றி இவிஎம்கள் சேதம் 4 பூத்களில் நாளை மீண்டும் வாக்குப்பதிவு

பெதுல்: பெதுல் தொகுதி இவிஎம்களை ஏற்றிச்சென்ற பஸ்சில் தீப்பிடித்ததால் 4 பூத் இவிஎம்கள் சேதம் அடைந்தன. அங்கு நாளை மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மக்களவை தொகுதியில் ஏப்.26ம் தேதி தேர்தல் நடக்க இருந்தது. ஆனால் பகுஜன் சமாஜ் வேட்பாளர் இறந்ததால் மே 7ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு இவிஎம்கள் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு பாதுகாப்பாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. இதே போல் 6 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பஸ்சில் ஏற்றி எடுத்துச்சென்ற போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கோலா கிராமத்திற்கு அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பஸ் ெசன்ற போது இந்த தீவிபத்து ஏற்பட்டது. அப்போது பஸ்சில் 6 மின்னணு எந்திரங்கள் இருந்தன. இதில் 4 இவிஎம்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து 4 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post ம.பியில் பரபரப்பு பஸ்சில் தீப்பற்றி இவிஎம்கள் சேதம் 4 பூத்களில் நாளை மீண்டும் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Betul ,Election Commission ,Betul Lok Sabha ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...